வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி – போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்து!

Sunday, October 13th, 2024

பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத்  இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்த புகார்களை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பருவகால பயணசீட்டுகளை வைத்திருக்கும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

000

Related posts: