பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை – நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றும் நடைமுறைக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை இயக்கப்படும்.

இதன்படி நாளை (22) முதல் 100 மேலதிக பேருந்துகள் நீண்ட தூர சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

000

Related posts: