இலங்கை உட்பட 5 நாடுகளுக்கு பயணத்தடை!
Saturday, April 24th, 2021இலங்கை உட்பட மேலும் சில நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத்தடை விதித்துள்ளதாக சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஏனைய நாடுகளுக்கு பயணித்துள்ள சவுதி அரேபிய பிரஜைகள் மீண்டு நாடு திரும்புவதற்கு 72 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக முன்னதாக கனடா, ஓமான், பிரித்தானியா ஆகிய நாடுகள் ஆசிய நாடுகள் சிலவற்றுக்கு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இ.போ.ச. டிப்போக்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது
வைத்தியசாலையில் கொரோனா அபாயம் எதுவும் இல்லை - வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார் தெரிவிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமரினால் மக்கள் வ...
|
|