யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரத்த தான முகாம் – கொடையாளர்ளுக்கு அழைப்பு!
Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணிக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையாளர் , நலன்விரும்பிகளின் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றனர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்.
000
Related posts:
இலங்கை தூதுவர் மீதான தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புபடவில்லை - மலேஷியா!
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரள வேண்டும் : சமூக ந...
பசில் ராஜபக்ஷ - பிரதமர் தினேஷ் குணவர்தன சந்திப்பு - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாற...
|
|
|


