முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது!
Friday, December 20th, 2024
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது
இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்றையதினம் (19) கரை ஒதுங்கியிருந்தது.
குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண் மற்றும் முதியவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
000
Related posts:
|
|
|


