மர்மக் காச்சல் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார்.
தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
000
Related posts:
இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை செயற்படமாட்டாது - கடற்படைத்தளபதி!
ஈ.பி.டி.பி ஆதரவு: பருத்தித்துறை நகரசபை ஆட்சியையும் வசப்படுத்தியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
பெற்றோல் தாராளமாக கையிருப்பில் உள்ளது - சேமிப்பதும் சட்டவிரோத விற்பனையும் குற்றம் என இலங்கை பெற்றோலி...
|
|