மூன்று லட்சம் இளைஞர்கள் பதிவு செய்யப்படவில்லை!
Sunday, July 31st, 2016இவ்வாண்டு வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியான சுமார் 3 லட்சம் இளைஞர், யுவதிகள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
18 முதல் 35 வயதான இந்த இளைஞர் யுவதிகளை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கட்டமைப்புக்கான சர்வதேச நிதியம் இணைந்து சமூக வலைத்தள வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேண்டும் என்றே தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் சட்டம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தம்!
சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது - தேசிய நீர் வழங்கல் சபை ச...
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
|
|