ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்!

Saturday, September 17th, 2016

 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆம் பொதுச் சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.

பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 194 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.சாதாரண விமானம் ஒன்றில் எளிமையான முறையில் குறைந்த பிரநிதிகள் எண்ணிக்கையுடன் ஜனாதிபதி இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2000

Related posts:

இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது – நிதி அமைச்சர்...
மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை - வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை...
எரிபொருள் விநியோகத்தில் யாழில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை – தவறான பொறிமுறையால் எரிபொருள் நிரப்பு ந...