ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைகிறது!

Sunday, March 26th, 2023

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால், கடந்த சில தினங்களாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பொருட்களின் விலைகளை குறைப்பதன் பலன் நேரடியாக நுகர்வோருக்குச் செல்லும்.

மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு மற்றும் மிளகாய் போன்ற நுகர்வோர் பொருட்கள் நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும்.”என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: