நான்காவது டெக்ஸ் மாநாட்டில்  பங்கேற்க நேபாளம் செல்லும் ஜனாதிபதி!

Monday, August 27th, 2018

வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை(28) நேபாளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த மாநாடு, நான்காவது தடவையாக நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரென்றும், லும்பினி நகரத்தையும் பார்வையிடவுள்ளாரென, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: