கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் இலங்கைக்கு புகழாரம்!

Saturday, April 11th, 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருருவதில் இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே வெற்றிகண்டுள்ளன என பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வில், இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது என கூறும் அந்த ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை வேறெந்த நாடுகளும் மேற்கொள்ளாத மிகச் சரியான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர். அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரே தமது நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நிலையில் இலங்கை அவ்வாறு அல்லாது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவ முன்னரே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இப்போது வரையில் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் மிக உயரிய மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சயிட்டத்தை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மரணங்களின் அதிகரிப்பு வேகமானது 1.07 சதவீதமாக பத...
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...