நாடாளுமன்ற தேர்தல் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் ஆரம்பம்!
Wednesday, November 13th, 2024
நாடாளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.
வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
000
Related posts:
தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்த விசேட சட்டம் - மஹிந்த தேசப்பிரிய !
சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து - ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்!
எரிபொருளுக்கான QR முறைமை இன்றுமுதல் இரத்து - அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|
|


