நல்லூர் வீதியில் புகுந்த பாரிய முதலை!
Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
http://www.epdpnews.com/wp-content/uploads/2024/11/VID-20241123-WA0063-1.mp4

000
Related posts:
யாழ் மாவட்டத்தில் ஐந்து குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிப்பு!
இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு என தெரிவிக்கப்படுவது முற்றிலும் தவறான செய்தி – அடியோடு நி...
இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் - தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்...
|
|
|


