ஈ.பி.டி.பி. கட்சியை அனுபவ ரீதியாக அறிந்தவர்கள், அதனை மக்கள் மத்தியில் உரக்க சொல்ல வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Monday, June 1st, 2026

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுமானங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச ரீதியாக பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நேற்று வடமராட்சி, அல்வாய் கிராமத்தில் விசேட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, கடந்த தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த பின்னடைவுகள் தெடர்பாக தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், கட்சி செயற்பாடுகளில் மோற்கொள்ளப்பட்ட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.
குறித்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் சமகால அரசியல் தொடர்பான தன்னுடைய நிலைப்பாடுகளையும் எதிர்பார்ப்புக்ளையும் வெளியிட்டதுடன், கட்சியின் வேலைத் திட்டங்கள் மேலும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், கட்சியின் செயற்பாடுகளை கடந்த காலங்களில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவர்கள், அதனை வெளிப்படைய மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல தயங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

Related posts:


இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் ச...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து ...