எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாடு!
Wednesday, August 30th, 2017ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகி மிக எழச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம் (30) முற்பகல் 10 மணிக்கு குறித்த பேராளர் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும் ஆலோசனையுடனும் உருவாக்கப்பட்ட கட்சியின் மகளிர் அணியின் பேராளர் மாநாடு முதன் முறையாக இன்று நடைபெறுகின்றது.
அரசியலில் மகளிரின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தி சமூக மாற்றத்திற்கும் ஏற்றத்திற்குமான வகையில் மகளிரின் வகிபாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இப்பேராளர் மாநாடு ஒழங்குசெய்யப்பட்டுள்ளது.
Related posts:
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது - டக்ளஸ் தேவானந்தா ...
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
|
|