இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!
Friday, January 25th, 2019மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தாமை தொடர்பில் நாடாளுமன்றத்தின் கடந்த முதலாவது அமர்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியினையும் முன்வைத்துள்ளேன். அதற்கு உடனடி பதில் கிடைக்கவில்லை. உடனடி பதில் கிடைக்காமையானது, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் மேலும் இழுத்தடிப்புகள் இடம்பெறுமோ? என்ற சந்தேகத்தை எமது மக்களிடையே ஏற்படுத்தி இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதை வலியுறுத்துகின்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இத்தகையதொரு நிலையில், நாட்டுக்கு மிக முக்கியமானதொரு விடயத்தை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அவர்கள் இன்று இந்த சபைக்கு கொண்டு வந்திருப்பது தொடர்பில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் தமிழ் பேசுகின்ற மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கோரி, சாத்வீக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், அத்தகைய சாத்வீகப் போராட்டங்கள் யாவும் பேரினவாத சிந்தனைகளாலும், சுயலாப தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் தோல்வி கண்டிருந்த நிலையிலேயே ஓர் ஆயுதமேந்திய போராட்டத்தின்பால் தள்ளப்பட்டிருந்தோம்.
ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது அப்போதைக்கு இந்த நாட்டுக்கு புதியதொரு விடயமல்ல என்ற போதிலும், எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு வேறு வழிகளின்றிய நிலையிலேயே அதனை தேர்ந்தெடுக்க வேண்டியேற்பட்டிருந்தது.
அதற்கான தேவை அப்போது இருந்தது. அந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் பெறுபேறாகவே 13வது திருத்தச் சட்டத்தின் ஊடான மாகாண சபை முறைமை எமது மக்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர், ஆயுதம் தாங்கியப் போராட்டம் தேவையற்றது என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனினும், துரதிர்~;டவசமாக அந்த ஆயுதம் தாங்கியப் போராட்டம் திசை மாறிப் பயணித்து, ஒரு பயங்கரவாத உருவினை முழுமையாக தன்னகத்தே கொண்டு எமது மக்களை முள்ளிவாய்க்கால் வரையில் தள்ளிவிட்டு, ஏராளமான அழிவுகளுக்கு வித்திட்டுவிட்டது.
அதுமட்டுமன்றி, இந்த நாட்டில் இன, மத பேதங்களின்றியும், இன, மத பேதங்கள் பார்;த்தும், பலர் கொல்லப்பட்டும், பல அழிவுகள் ஏற்படுத்தப்பட்டும் 2009ஆம் ஆண்டில் அந்த அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மாகாண சபை முறைமையை எடுத்துக் கொண்டால், எந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், எந்த மக்களுக்கான அதிகாரங்களைப் பகிர்வதற்கும், எந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டதோ, அந்த மக்கள் வாழுகின்ற மாகாணங்கள் தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்கள் அந்த முறைமையால் போதிய நன்மைகளை அடைந்தன. அடைந்தும் வருகின்றன.
ஆரம்பத்தில் வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைத்து வழங்கப்பட்டிருந்த மாகாண சபையினை புலிகள் இயக்கத் தரப்பினர் தங்களது சுயலாபம் காரணமாக நிராகரித்து விட்டனர். அதன் பின்னர், அந்த மாகாண சபையை ஏற்றுக் கொண்டிருந்த தமிழ்த் தரப்பினர், அதனைக் குட்டிச் சுவராக்கி, குதாகலித்துக் களித்தனர். குறிப்பாக, அது ஒரு வாடி வீடு என நினைத்தே அதன் ஆட்சியாளர்கள் செயற்பட்டனர்.
Related posts:
|
|