மீண்டும் டெங்கு தலைதூக்கும் அபாயம்!
Tuesday, October 10th, 2017
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. நீர்தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் பொருட்களையும் இனங்கண்டு அவற்றை அழித்துவிடுவது அவசியம் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
Related posts:
பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்வு!
புதிய அரசமைப்பின் பின்னரே மாகாணசபைத் தேர்தல் - அமைச்சர் சரத்வீரசேகர!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நட்டஈட்டுக்கு வழங்கப்பட்ட கப்பம் - விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்...
|
|
|


