பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்வு!

Sunday, April 19th, 2020

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இதுவரை 7 இலட்சத்து 38 ஆயிரத்து 792 பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பல மானிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினை முற்றாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் பல நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னதாக மானிலங்களின் ஆளுனர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முனைப்புடன் ஆரம்பிக்கும்படி அவர் பணிப்புரை விடுத்திருந்தார்.

Related posts: