செனல் 4 ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழு!
Saturday, October 14th, 2023செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை வழங்க முடியாது - இன்டர்போல் !
சுய பூட்டுதல் வரவேற்கத்தக்கது - சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் கருத்தில் கொள்ள...
ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை - நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன...
|
|