சொந்த மக்களுக்கு என்ன செய்தது கூட்டமைப்பு? – அந்தக்கட்சி மாகாணசபை உறுப்பினர் சிவயோகம் கேள்வி!
Saturday, January 27th, 2018தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இதுவரை என்ன செய்தனர்? இவ்வாறு கேள்வி எழுப்பினர் அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சிவயோகம்.
வடக்கு மாகாணத்தில் வீதிப்பிரச்சினைகள் போன்று பல பிரச்சனைகள் காணப்படுகின்றன இவற்றுக்கெல்லாம் உரிய தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் ஆனால் அதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
குறிப்பாகக் கூட்டமைப்பின் சார்பில் 16பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் , 30பேர் மாகாணசபையில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர் இந்த இரண்டு தரப்பினர்களும் இணைந்து கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சாதித்தவை என்ன? மக்களுக்குப் பயனுள்ளதாக எதனைச் செய்திருக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வருகிறது ஶ்ரீதேவி !
அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்தல்!
“ரப்” கருவி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது - கல்வி அமைச்சு அறிவி...
|
|