அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தேடி சுற்றிவளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை!
Wednesday, March 2nd, 2022
அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆரம்ப பாடசாலையினை தரத்தினை உயர்த்த நடவடிக்கை – கல்வி அமைச்சர்!
புங்குடுதீவில் நடந்த கொடூரம் - பூசகர் அடித்துக் கொலை !
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சர் சுசில் பிர...
|
|
|


