பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Sunday, March 24th, 2024பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் உள்ள 1,7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி தலைமையில் தேசிய நிகழ்வு!
கொவிட் 19 வைரஸ்: ஜப்பான் பயணிகள் கப்பல் - இலங்கையர் தொடர்பில் அதிக கவனம்!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு - செலவுத் திட்டம் - நாமல் ...
|
|