இலங்கைக்கு அவுஸ்ரேலிய  89 மில்லியன் நிதியுதவி!

Saturday, May 26th, 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை அவுஸ்ரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து இலங்கைக்கு வழங்கியுள்ளன.

இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் மூன்று வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையானது வெள்ளம், கடும்காற்று, வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: