அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
Wednesday, April 17th, 2019
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று(17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வேனில் 12 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
யாழ் தொழில் நுட்பவியல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் - வானிலையில் பாதிப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அற...
எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை - கல்வி அமைச்சர் சுசில் அறி...
|
|
|


