காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்க உடனடி நடவடிக்கை!

Friday, June 2nd, 2017

கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம் தமிழர்கள் தொடர்பில் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி இருந்தது.ஆனால் அந்த உறுதிமொழிகள் எவையும் உரிய வகையில் இதுவரையில் அமுலாக்கப்படாமல் இருக்கின்றமை வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: