பிரஜாவுரிமைகளை ஆராய தீர்மானம்!

Monday, October 23rd, 2017

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சஹீல முனசிங்க வெளிநாட்டவர் என்ற விடயம் தெரியவந்ததன் பின்னர், நாட்டில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளினதும் பிரஜாவுரிமைகள் தொடர்பில் பரீட்சிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஆராய்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல்கள் சட்டத்தின்கீழ் கட்சிகளின் நிர்வாகிகள் வெளிநாட்டவர்களாக இருக்க முடியாது என்ற விடயத்தை கருத்திற்கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளின் பிரஜாவுரிமைகளையும் ஆராய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

Related posts: