தேர்தலில் அவசியம் ஏற்படின் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் – பொலிஸ் பேச்சாளர் ருவன் எச்சரிக்கை!

Saturday, February 3rd, 2018

உள்@ராட்சி மன்றத் தேர்தலின்போது தண்டனை சட்டக் கோவையிலுள்ள ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் சட்டதிட்டங்களை எவ்வாறு அமுல் செய்வது என்பது குறித்த விசேட கiயெட ஒன்றினையும் பொலிஸ் தலைமையகம் தயார் செய்துள்ளதாகவும் அதனை அடுத்து வரும் நாட்களில் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Related posts: