கொழும்பு மெகசீன் சிறைச்சாலையிலும் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மத்திய நிலையங்கள்!
Wednesday, December 13th, 2017
கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைள் நாடு முழுவதிலும் உள்ள 5116 மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றது.
688,573 பரீட்ச்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அனைத்து மத்திய நிலையங்களிலும் வெற்றிகரமாக பரீட்சைகள் நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
ரயில்வே வேலைநிறுத்தம் இடம்பெற்ற போதிலும் அனைத்து பரீட்சார்த்திகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்காக வைத்தியசாலையில் பரீட்சை மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டது.வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜயவிக்கிரமவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட அவசர தீர்மானத்திற்கு அமைய இந்த பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இதற்கு மேலதிகமா கொழும்பு மெகசீன் சிறைச்சாலையிலும் பரீட்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதில் 3 பரீட்ச்சாத்திகள் தோற்றினர்
Related posts:
|
|