முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம் – மக்களின் கைகளிலேயே உள்ளது என்கிறார் இராணுவத் தளபதி!

Monday, March 29th, 2021

ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா ? இல்லையா ? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது என தெரிவித்துள்ள இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதோடு சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: