அவசர காலநிலை சட்டம் நீடிக்கப்பட மாட்டாது!
Tuesday, March 13th, 2018
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தி இருந்த அவசர காலநிலை எதிர்வரும் 15ம் திகதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், குறித்த அவசர காலநிலையினை மேலும் நீடிக்க தற்போது அவசியமில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாலும், மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியினால் கடந்த 06ம் திகதி முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜவுளி துணி இறக்குமதிக்கும் வருகின்றது இறக்குமதி தடை - அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவிப்பு!
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை பெறமுடியும் - வலுசக்தி அமைச்சர் தெரிவ...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் - ...
|
|