25 பேர் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை முயற்சி!
Monday, May 28th, 2018
தமிழகத்தின் நிலக்கரி சுரங்கத்தில் பணி புரிந்து வரும் 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 41 நாட்கள் முழுவேலை வழங்கக்கோரியும், பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணிவழங்கக்கோரியும் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர்.
இந்நிலையில் இன்று(28) 25 தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 6 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
இரண்டு தீவுகளை சவுதியிடம் ஒப்படைக்கிறது எகிப்து!
அப்பலோ நாடகம் முடியும் நேரம் இது - தமிழச்சி!
பிரித்தானிய உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!
|
|
|


