அப்பலோ நாடகம் முடியும் நேரம் இது – தமிழச்சி!
Sunday, October 2nd, 2016தமிழக முதலவர் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட தமிழச்சி தொடர்ந்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
முதல்வர் அப்பலோ வைத்தியசாலையில் உள்ள நிலையில் அவரது புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் பெரும் சர்ச்சைக் கருத்துக்களும் வெளியாகியிருந்தது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் புதிய கருத்தினை தமிழச்சி வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அப்பலோ நாடகம் முடியும் நேரம். காட்சிகள் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.
ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது ‘சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்’ என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.
ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள் ராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.
ஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்? என அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|