பிரித்தானிய உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

Wednesday, September 25th, 2019


பிரித்தானிய நாடாளுமன்றம் ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை பிழையானது என்று அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.

ப்ரெக்சிட் அமுலாக்கத்துக்கான காலம் ஒக்டோபர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைப்பதானது, சட்டத்துக்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக, பிரத்தானிய பிரதமர் அலுவலகம் இன்னும் அறிவிப்பு எதனையும் வெளியாக்கவில்லை.எனினும் உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts: