உகாண்டாவில் எபோலா கோரத்தாண்டவம் – அவசரநிலையை அறிவித்தஉலக சுகாதார நிறுவனம் !
Monday, May 18th, 2026காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, இதனை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்றால் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது பரவி வருவது மிகவும் அரிய வகை ‘Bundibugyo’ வைரஸ் ஆகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது முறையான சிகிச்சையோ இல்லை என்பது கவலையளிக்கும் செய்தியாகும்.
இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் விகிதம் 50 சதவீதத்தை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளைக் காங்கோ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Related posts:
துருக்கிக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!
ரசிகர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்!
தேர்தல் நடத்தாவிட்டால் வெளியேறுவேன் – மஹிந்த!
|
|
|


