ஹெலிகாப்டர் விழுந்த விபத்து:  உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, February 19th, 2018

மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோ ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒக்சாக்கா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நவரேட்டே, ஒக்சாக்கா மாநில கவர்னர் அலேஜான்ட்ரோ முரட் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்ற வேளையில், தரையிறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குல்லாகியுள்ளது.

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: