5000 பேர் படுகொலை!! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் – ஜனாதிபதி மைத்திரி வரவேற்பு!
Saturday, January 19th, 2019பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீங்கள் போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தம் முழு உலகிற்கும் எனக்கும் முன்னுதாரணமாக உள்ளது என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனது நாட்டில் போதைப்பொருள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் பாதையில் பயணிக்க வேண்டுமெனக் கருதுகின்றேன்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் காரணமாக இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
Related posts:
நேட்டோ அமைப்பின் விமானங்களை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்தது?
பிரித்தானியாவின் களை கொல்லியால் இலங்கை, இந்தியாவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் - அதிர்ச்சித்தகவலை அம்பலப...
ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!
|
|