பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672 பேர் பாதிப்பு!

Friday, April 16th, 2021

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 672பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 80ஆயிரத்து 976பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 191பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 40ஆயிரத்து 447பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 351பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 41இலட்சத்து 13ஆயிரத்து 338பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related posts: