ஹவாயிலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியது!

Sunday, May 6th, 2018

ஹவாய்த் தீவிலுள்ள கிலவ்வா எரிமலை வெடித்துள்ளதனைத் தொடர்ந்து  அந்த பிரதேசத்தில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எரிமலையை அண்டியுள்ள பிரதேசத்தில் வசிக்கும் ஆயிரத்து 700 இற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து வெளிப்பட்ட பாரிய சாம்பல் துகள்கள் பிரதேசத்தில் உள்ள வீதிகளை மறைத்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கந்தகம் மற்றும் எரிந்த விருச்சங்களின் மணம் தொடர்ந்தும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட மக்கள் சனசமூக நிலையங்களில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு உதவும் நோக்கில் இராணுவம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஹவாய் ஆளுனர் டேவிட் இக்தெரிவித்துள்ளார்.

Related posts: