பற்றி எரிந்தது கப்பல்- மாலுமிகளின் நிலைமை பரிதாபம்!

Friday, March 9th, 2018

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கப்பலில் 23 மாலுமிகள் இருந்ததாகவும் அவர்களில் 4 பேர் மாயமாகியுள்ள நிலையில் எஞ்சியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இவர்களில் 13 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்தை அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் கப்பலை மீட்பது கடினம் என நிர்வாகிகள் தரப்புதெரிவித்துள்ளது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்ட சரக்கு பெட்டகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தே மொத்த கப்பலுக்கும் பரவியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே விபத்தின் போது சுற்றுவட்டாரத்தில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அவர்கள் எந்த பதிலும் தரவில்லை எனவும்விபத்துக்குள்ளான கப்பல் மாலுமிகள் தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: