தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 48 மாணவர்கள் பலி – ஆப்கானிஸ்தானில் சோகம்!
Thursday, August 16th, 2018ஆப்கானில்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
காபூல் அருகே உள்ள தாஷ்த்-ஏ-பார்சா பகுதி, ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். அங்குள்ள தனியார் கட்டடத்தில் பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்காக ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கட்டடத்தின் உள்ளே நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர். மேலும் 67 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் பலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். அமைப்புதான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று ஷியா முஸ்லிம் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|