தோல்வியை பாரதிய ஜனதா கட்சி மறைக்கின்றது – ப. சிதம்பரம்!

Saturday, April 15th, 2017

நடந்து முடிந்த 10 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 5 தொகுதிகளில் தோல்வியுற்றதை பாரதிய ஜனதா கட்சி மறைத்துவிட்டு, வெற்றியை மாத்திரம் கூறி வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.

தனது டுவிட்டரில் தளத்திலே ப. சிதம்பரம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  கர்நாடகா, மேற்குவங்காளம், அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 10 சட்டசபைகளுக்கு கடந்த 9 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் தலா 2 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், நடந்து முடிந்த 10 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 5 தொகுதிகளில் தோல்வியுற்றதை பாரதிய ஜனதா கட்சி மறைத்துவிட்டு வெற்றியையே கூறி வருவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலே மத்திய பிரதேசத்தின் அட்டெர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிடம் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: