மீண்டும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புதின்!

Monday, March 19th, 2018

ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று(18) நடைபெற்றது.

இத்தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. 94.80 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76.56 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பவெல் குருடினின் 11.92 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

புதின் தற்போது வரையில் 5 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 184 வாக்குகள் பெற்றுள்ளார். இது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெற்ற 80 லட்சத்து 50 ஆயிரத்து 978 வாக்குகளை விட 4 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 206 வாக்குகள் அதிகமாகும்.

Related posts: