“அக்பார் டவுன்” தேர்தல் தொகுதி “எந்தேரமுல்லை 02” என மாற்றம் ?
Thursday, December 21st, 2017
“அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02” என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, தேர்தல்கள் ஆணையாளருக்கு அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் முஸ்தபா, குறித்த அந்தப் பகுதியை எந்தேரமுல்லை 02 என மாற்றுவது குறித்து கலந்துரையாடியுள்ளார் என அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
16 வருடங்கள் சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழே ஈருக்கின்றோம் - சிவசக்தி ஆனந்தன்!
இலங்கை வரலாற்றில் தபால் திணைக்களதுக்கு இம்முறை அதிக வருமானம் கிடைத்துள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்ப...
காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - ஹமாஸ் தெரிவிப்பு!.
|
|