மகளை காப்பாற்றப் போராடிய தந்தை!

ஆந்திராவில் தந்தை ஒருவர் ‘பாகுபாலி’ பாணியில் தனது மகளை காப்பாற்றப் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பங்கி சதிபாபு (30) உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்ற பாகுபாலி பட பாணியில் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹஜ் போதனையிலிருந்து விலகும் செளதியின் மூத்த மதகுரு: கமேனியின் சாடல் காரணமா?
அகதிகள் நெருக்கடி - லெபனானுக்கு உதவி செய்ய பிரான்ஸ் இணக்கம்!
26 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த தபால் அட்டையால் அதிர்ச்சியடைந்த கடிதத்தின் உரிமையாளர்!
|
|