சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் நிறைவுக்குவந்தது!

Saturday, December 24th, 2016

அலெப்போவில் கடைசி போராளி குழுக்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அந்நகரை முழுமையாக மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

அலெப்போவில் பாதுகாப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், போராளிகளுக்கு இது மாபெரும் அடி என்றும் செய்திக்குறிப்பு ஒன்றில் ராணுவம் தெரிவித்துள்ளது.

அலெப்போவை விட்டு வெளியேற விரும்பிய அனைத்து பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் போராளிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது.சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய எழுச்சியை தொடர்ந்து அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாககும்.

கடந்த வாரத்தில் மட்டும் குறைந்தது 34 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் போராளிகள் கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

_93103698_gettyimages-630428764

Related posts: