ஆயுதங்கள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
Thursday, February 15th, 2018
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு 7.40 லட்சம் ரூபா பெறுமதியில் நவீன ரைபில் ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற போதே இவ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலகு ரக துப்பாக்கிகள் 1,819 கோடி ரூபாய் மதிப்பிலும், ராணுவத்திற்கு 5,719 ஸ்னைப்பர் ரைபில்கள் 982 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
Related posts:
பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு !
வடகொரியா மிது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் எதுவித பயனுமில்லை - புடின்
பாகிஸ்தான் தொடர்பான தெளிவான செய்தி வெளிப்படும் - மியன்டட்!
|
|