பிரேசில் சிறை கலவம்: 56 பேர் கொடூரக் கொலை!
Wednesday, January 4th, 2017
பிரேசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சில சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், எரிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன.
அமேசோனாஸ் மாநில தலைநகரான மானவுஸில் இருக்கும் நெரிசல் மிக்க சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான கலவரம் 17 மணி நேரம் நீடித்தது.
கலகக்காரர்கள் 12 சிறைக்காவலர்களை பிணைக்கைதியாக பிடித்ததோடு பல டசின் கைதிகள் தப்பிச் சென்றனர். பிரேசிலில் பல ஆண்டுகளில் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட சிறைக் வலவராமாக இது இருந்தது.
சிறைச்சாலையை கட்டுப்படுத்துவது, போதை கடத்தல் வழிகளை கைப்பற்றுவது குறித்து இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலே கலவரமாக வெடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்து பிரித்தானியாவில் இருக்க அனுமதி
ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் - அவுஸ்திரேலியாவிடம் ல...
இஸ்ரேல் வான் தாக்குதல் - காசாவில் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள...
|
|