பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது; பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Friday, December 25th, 2020

பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி வந்தன.

இந்நிலையில் பல மாதங்களாக கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் உடனடி விலகல் பொருளாதார பாதிப்பை குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்தும் , ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் லோர்ட் பாரஸ்ட் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மைக்கல் பார்னியர் மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து தவறேதும் இல்லாதபடி கவனமாக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்து நேற்று முன்தினம் இரவு தனது சக அமைச்சர்களுடன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்தாலோசித்தார்.

பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என, இங்கிலாந்து விரும்பியதுபோல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “ஒப்பந்தம் முடிவடைந்தது ” என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் டுவீட் செய்துள்ளார்.

அத்துடன் இங்கிலாந்து ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் “முதலிட சந்தையாகவும்” இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில் “நாங்கள் இறுதியாக ஒரு ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம்” என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.

மேலும் “இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா சாலையாக இருந்தது, ஆனால் அதன் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: