துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி – அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு!

Friday, June 25th, 2021

அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெயியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக, ஜனாதிபதி ஜோ பைடன் 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார் எனவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த 5 பணிக்குழுக்கள் நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வொஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும்.

இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது.

மேலும், இப்போது சட்ட விரோத துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு 5 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது, கொடிய துப்பாக்கி சூடு மற்றும் பிற வன்முறையில் பயன்படுத்தப்படுகிற சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி வினியோகத்தை தடுப்பதில் ஒரு முக்கிய படியாக அமையும் எனவும் அந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: