படகு மூழ்கியதில் 58 பேர் பலி – மொரிடேனியாவில் பரிதாபம்!

Friday, December 6th, 2019


மேற்கு ஆபிரிக்க நாடான மொரிடேனியா அருகில் அத்லாண்டிக் சமுத்திரத்தில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கியதில் குறைந்தபட்சம் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்துள்ளவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகம் தெரிவித்துள்ளது.

படகு விபத்திற்கு உள்ளாகிய வேளையில் அதில் 150 பேர் வரை பயணித்துள்ள நிலையில், ஏனையவர்கள் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்லும் நோக்கில் கடந்த 27 ஆம் திகதி குறித்த படகு கெம்பியாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: